கோவையில் ஆம்புலன்ஸ்-ஆக மாறிய அரசு பஸ்…! பயணி காப்பாற்றப்பட்டார்…!

கோவை: கோவையில் பயணி ஒர்வருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நேரத்தில் உதவிய அரசுப் பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் போக்குவரத்து கழகத்தின் கோவை கிளையில் தினேஷ்குமார் ஓட்டுனராகவும், சசிகுமார் நடத்துனராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 9ம் தேதி இவர்கள் இருவரும் அன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மாலை 7.45 மணி அளவில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 55 வயது ஆண் பயணிக்கு திடிரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனைப் பார்த்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

உடனே பேருந்து நடத்துனர் தினேஷ் குமார் மற்றும் ஓட்டுநர் சசிகுமார் இருவரும் பேருந்தை நேராக மருத்துவமனைக்கு செலுத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பேருந்து அன்னூர் அருகில் இருந்த குமரன் மருத்துவமனைக்குச் சென்றது.

அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சையில் அந்தப் பயணி தற்போது நலமுடன் உள்ளார். பயணியைக் காப்பாற்றிய தினேஷ்குமார் மற்றும் சசிகுமாரை பயணிகள் வெகுவாகப் பாராட்டினர்.

இதனிடையே இன்று கோயம்புத்தூர் கோட்டத்தின் முதுநிலை துணை மேலாளர் மனிதவளம் இருவரையும் நேரில் அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, அவர்கள் நற்செயலைப் பாராட்டினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.