கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம்; அழகிகள் மீட்பு!

கோவை: கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தி வந்த வாலிபரைக் கைது செய்த போலீசார் அங்கிருந்த 4 அழகிகளை மீட்டனர்.

சிவனந்தாபுரம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து, போலீசார் மசாஜ் சென்டருக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் மசாஜ் சென்டர் மேலாளர் பெங்களூரூவை சேர்ந்த பிரேம் குமார் (32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 21, 24, 26 மற்றும் 32 வயது இளம்பெண்களை மீட்டனர். மேலும், அவர்கள் 4 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் பாபு மல்லா மற்றும் பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp