கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்- காரணம் என்ன?

கோவை: நீதிமன்றங்களில் e-filing முறையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனர்.

நீதிமன்றங்களில் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி முதல் e-filing முறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு சில வழக்கறிஞர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்றங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் கட்டாயமாக்குவதை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் வழக்கறிஞர் சேம நல நிதியை 10 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்திட வலியுறுத்தியும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி உள்ளனர். கோவையிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி உள்ளனர். மேலும் இவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் முன்பு கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp