கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் கொள்ளை- மேலும் இருவர் கைது…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை, கவுண்டம்பாளையத்தில்  அரசு அலுவலர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த 28ம் தேதி 13 வீடுகளில் 42 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் (48), கல்லு ஆரிப் ( 45) மற்றும் இர்பான் (42)  ஆகிய மூன்று பேரை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

இதில் ஆசிப் (48)  இறந்துவிட்டார். மேலும் இந்த கொள்ளை கும்பலுக்கு ஆட்டோ ஓட்டுநராக இருந்து உதவியதாக ஆட்டோ டிரைவர் ஆயுப்கான் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் இந்த கொள்ளை கும்பலுக்கு கோவையில் இருந்து திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த தாவூத் (18) , ஃபர்யான் (23) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரிலே, கொள்ளையர்கள் வந்து கொள்ளை திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் ஒருவர் இறந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஃபர்மான் என்பவர் உயிரிழந்த ஆசிபின் தம்பி என கூறப்படுகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...