OPS டெல்லி பயணம்- பதில் அளிக்காமல் புறப்பட்ட EPS…

கோவை: கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர். மேலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்.

Advertisement

தொடர்ந்து இன்று காலை பல்லடத்தில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்றனர்.

எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்த நிலையில் பதிலளிக்காமல் புறப்பட்டார். ஓபிஎஸ் டெல்லி சென்றது குறித்தான கேள்விக்கும் பதில் அளிக்காமல் விமான நிலையத்திற்குள் சென்றார்.

அவரை வழியனுப்பி வைத்து விட்டு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடமும் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர் அவரும் பதிலளிக்காமல் சென்றார்.

Advertisement

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp