கோவையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலம்- மக்கள் மகிழ்ச்சி…

கோவை: கோவையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் அடுத்த SIHS காலனியில் ரயில்வே தண்டவாளம் செல்வதால் அதனை கடப்பதற்கு உயர்மட்ட மேம்பாலம் வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனால் ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்க வழி அமைத்து தரப்பட்டது. ஆனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நின்று விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே உயர்மட்ட மேம்பாலம் வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

அந்நிலையில் 2010ம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் போது அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் குறிப்பிட்ட நிலங்கள் கையப்படுத்தப்பட்டு 2013ம் ஆண்டு மேம்பால வேலைகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

Advertisement

இருப்பினும் பல்வேறு காரணங்கள் காரணமாக பணிகள் மந்த நிலையில் நடைபெற்றன. அதனால் அந்த மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பின்னர் 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந் மீண்டும் மேம்பால பணிகள் விரைவு படுத்தப்பட்டு முடிவடைந்தது. சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு 55.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடிக்கபட்ட இதனை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேம்பாலம் திறக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பயணிகள் ஆட்டோவில் சரக்கு செல்வதா? கோவை ஆட்டோ டிரைவர்கள் குமுறல்!

கோவையில் பயணிகள் ஆட்டோக்களில் வணிக சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுவதை கட்டுப்படுத்த கோரி சரக்கு ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.