கோவையில் சாக்கடையில் விழுந்து வாலிபர் பலி!

கோவை: கோவையில் சாக்கடையில் மயங்கி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீளமேடு காவல் நிலையம் முன்பு கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. அங்கு இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்.

அவர் திடீரென மயங்கி சாக்கடையில் விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அங்கு வந்து மயங்கி விழுந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் அந்த வாலிபரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு சாக்கடையில் மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

Advertisement

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வட மாநில வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...