டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி என்பது என்ன?
நாட்டில் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. இதுவே ரெப்போ வட்டி விகிதம்.
இந்த வட்டி விகிதத்தை பொறுத்து, வங்கிகள் மக்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் செய்கின்றன.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் ஏற்கனவே வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்கள் வாங்கியிருப்போரின் கடன்களின் (கடன் திட்டத்திற்கு ஏற்ப) வட்டி விகிதம் குறையும்.
கடந்த ஆண்டு ரெப்போ வட்டி விகிதம் 0.25 குறைக்கப்பட்டு, வங்கிகளின் வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதனிடையே கடந்த மூன்று நாட்களாக ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதம் குறையுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சாமானிய மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

