கோவை: பெயர் பலகை இல்லாததால் நீண்ட நேரமாக நின்ற அரசு பேருந்தால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
கோவை மாநகர் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் பெயர் பலகை இல்லாமல் நீண்ட நேரமாக அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து எந்த பகுதிக்கு செல்கிறது என்று தெரியாமல் பயணிகள் ஏறி அமர்ந்து நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
அந்த அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாததால் அந்த அரசு பேருந்து எந்த பகுதிக்கு செல்கிறது என்று தெரியாமல் பயணிகள் புரியாமல் தவித்தனர்.
ஒரு சில பயணிகள் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் ஆனதால் பேருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் மீண்டும் கீழே இறங்கி வேறு பேருந்து ஏறி சென்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ள சிலர் பெயர் பலகைகள் சரியாக வேலை செய்ததால் எந்தப் பேருந்து எங்கு செல்கிறது என்று பயணிகள் இடையே பெரும் குழப்பம் நிகழ்வதாகவும் இதனை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

