கோவை: வாயில் அதிமுக துண்டை கட்டிக்கொண்டு கோவை கவுன்சிலர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி விக்டோரியா காலில் சாதாரண மாம் என்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் கோவை மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக கவுன்சிலர்கள் ஷர்மிளா, ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஆகிய மூன்று பேர் கூட்ட அரங்கில் முன்பு அதிமுக துண்டை வாயில் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் அதிகளவு துர்நாற்றம் வீசிவருவதாகவும் அதற்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கு குப்பைகள் எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் எதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ள்து என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் மேயர் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மாதம் மாதம் இக்கூட்டத்தை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் கோவை மாநகராட்சியில் அதிகளவு ஊழல் நடைபெறுவதாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

