கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு குறித்து கோவையில் கேரள ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரள மாநில ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள கேரள மாநிலம் பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக, கோவை – கேரள எல்லைகளில் சோதனைச் சாவடிகக் கண்காணிப்பை, தீவிரபடுத்துவது, மதுபானம், பணம் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

