கோவை கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்…

கோவை: கோவையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 26.02.2026 அன்று கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்புக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கல்விகடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு (Core Committee) மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராக கொண்டு, 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவரும் 26ம் தேதி அன்று (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அரங்கில் நடைபெறும் சிறப்பு முகாமில் ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

கல்வி கடன் பெறும் மாணவ மாணவிகள், பான் கார்டு, ஆதார் கார்டு, 10-வது மதிப்பெண் பட்டியல், 12-வது மதிப்பெண் பட்டியல், கல்லூரிக் கட்டண விபரம் மற்றும் மாணவ/மாணவியர் கல்லூரியில் பயில்வதற்கான சான்றிதழ் (Bonofide Certificate), வருமான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (optional),

வங்கிக்கணக்கு புத்தகம் (விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கு அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி), கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு கொள்வதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.