கோவை: கோவையில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்றனர்.
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பெண்கள் ஒருங்கிணைத்த இறகு பந்து போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளை சார்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோவையில் பெண்கள் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் “Her Voice For Her Education” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.சங்கனூர் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள்மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
பெண்களின் கல்வி உரிமையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முயற்சி, விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

