பாலியல் புகாரில் கோவை பெண் எஸ்ஐ மீது வழக்கு

கோவை: பட்டாலின் கமாண்டன்ட் கைதை தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்த பெண் எஸ்ஐ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவைபுதூர் பகுதியில் தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. இதில் கமாண்டன்ட் ஆக எஸ்பி அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பணியாற்றி வந்தார்.

இவர் அங்கு பயிற்சிக்கு சேர்ந்த பெண் போலீசுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் கடந்த மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவர் நிபந்தனையின் பேரில், பணியிடை காலத்தில் தங்கியிருக்க வேண்டும். அரசின் அனுமதியின்றி தலைமையிடம் கடந்து செல்ல கூடாது என எச்சரிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கமாண்டன்ட் செந்தில்குமாருக்கு உடந்தையாக இருந்த தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு எஸ்ஐ புஷ்பகுமாரி (47) மீதும் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் பெண் எஸ்ஐ மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Fun Republic Mall-ல் அசத்தலாக திறமையை வெளிப்படுத்திய கோவை பெண்கள்! – VIDEO

மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை Fun Republic Mall-ல் நடந்த போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை அசத்தலாக வெளிப்படுத்தினர்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.