கோவை: கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கோவையில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுநாளும், மார்ச் 19-ம் தேதியும் கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் போது வெப்பநிலை குறைந்தாலும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வானிலை தகவலை உங்கள் சுற்றுவட்டார மக்களுடன் பகிர்ந்து, அவர்களும் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள உதவுங்கள்.

