கோவை: ஆர்ப்பாட்டத்திற்கு ஜிடி மேம்பாலத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணமலை நடந்து வந்தார்.
கோவையில் NDA கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்தபோது GD பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்தே பயணித்தார்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு NDA கூட்டணி சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிலையில் கோவையில் மாலை மழை பெய்த சூழலில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த அண்ணாமலை GD பாலத்தில் நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார். அப்போது காரில் இருந்து சிறிது தூரம் இறங்கி மேம்பாலத்தில் நடந்து பிறகு ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறினார்.
இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

