பரிசு பொருட்கள், பணம் கடத்தப்படுகிறதா? ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு…!

கோவை: கோவை ரயில் நிலையத்தில் இருந்து தேர்தலுக்காக பரிசு பொருட்கள் மற்றும் பணம் கடத்தப்படுகிறதா? என போலீசார் ஆய்வு செய்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் யாரும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு என 180 குழுவினர் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர். இது தவிர கட்சியினர் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லும் பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். தொழில் நிமித்தமாக பணம் கொண்டு செல்பவர்களிடம் பறிமுதல் செய்வது வியாபாரிகளிடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், தற்போது கேரளாவில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கோவை வழியாக கேரளாவிற்கு ஏராளமான ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவை ரயில் மூலம் கடத்தப்படுதை தடுக்க போலீசார் கோவை ரயில் நிலையத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் திறந்து பார்த்து சரி பார்த்தனர்.

Advertisement
coimabtore railway station

மேலும் ரயில் பெட்டிகளில் ஏறி அங்கிருந்த பயணிகள் உடைமைகள், ரயிலில் கொண்டு செல்லப்படும் பார்சல்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்தனர்.

இந்த பணியில் கோவை ரயில்வே போலீசாருடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல், மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்தும் அங்கும் 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவைக்குள் நுழையும், வெளியேறும் வாகனங்களில் வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் காரணமாக அசாம், மேற்கு வங்கத்தை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோவை ரயில் நிலையத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.

இவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது தவிர ரயில்களில் வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறதா? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

டெங்கு கொசுப் பரவல்- கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி 50,000 அபராதம்…

கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள்....

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...