Fish price Coimbatore | கோவையில் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு

கோவை: வரத்து குறைவால் கோவையில் மீன்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது.

ஒவ்வொரு நாளும் காலை செயல்படும் இந்த மொத்த மீன் மார்க்கெட்டிற்கு கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

Read also தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்

மேலும், மீன் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் இங்கு மீன் வாங்க வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக, கேரளாவில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்து தற்போது குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று வழக்கத்தை விட மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வரத்து குறைவு, கூட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த மீன் மார்க்கெட்டில், மீன்கள் விலை அதிகரித்து இருந்தது.

அதன்படி, நேற்று வஞ்சிரம் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ.300, இறால் ரூ.550, அயிலை ரூ.300, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600, கண்ணாடி பாறை ரூ.130 என விற்பனையானது.

Read also கோவையில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி- வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை…

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “வழக்கமாக வாங்கும் விலையை விட மீன்கள் விலை அதிகரித்துள்ளது. இது தவிர கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை சுத்திகரிப்புக் கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “கேரளாவில் இருந்து வரும் மீன்கள் குறைவாக உள்ளது. வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் மீன்கள் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சமூக நீதி சாசனம் வெளியிடப்பட்டது…

கோவை: கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சமூகநீதி சாசனம் வெளியிடப்பட்டது கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சமூகநீதி சாசனம் என்ற...

Video

கோவை அருகே விபத்து- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை அருகே ஏற்பட்ட விபத்தில் தந்தை - மகன் படுகாயமடைந்தனர். அந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தட்டாம் புதூர் பகுதியில், அதிவேகமாக வந்த கார்...