கோவையில் அதிகரிக்கும் வெயிலால் நுங்கு, இளநீர் விற்பனை அமோகம்

கோவை: கோவையில் கடந்த ஒரு வாரமாக வெயில் தீவிரமாக அதிகரித்துள்ளதால், உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு, இளநீர், தர்பூசணி, பழ ஜூஸ் கடைகளில் விற்பனை அமோகமாக உயர்ந்துள்ளது

கோவையில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களும் பகல் நேரத்தில் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Read also கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர் பரிதாப பலி!

இந்நிலையில், கோடையை சமாளிக்க மக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சாலையோரங்களில் தற்போது தர்பூசணி, இளநீர், நுங்கு, பழ ஜூஸ் போன்ற தற்காலிக கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன.மேலும் தற்போது நுங்கு, பதநீர் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து நுங்கு, பதநீர் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 நுங்கு பதநீருடன் சேர்த்து ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read also கோவையில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி- வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை…

காந்திபுரம், உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தை விட அடுத்த மாதம் வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.’’ என்றனர். இதேபோல், தர்பூசணி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரைக்கும், இளநீர் ஒன்று ரூ. 50 முதல் ரூ.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video