Breaking: கோவையில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கோவை: கோவையில் கழிவுநீர் தொட்டியில் மோட்டார் ரிப்பேர் செய்ய இறங்கிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இருவர், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் ஆங்காங்கே கழிவு நீர் உந்து நிலையங்கள் மூலம் உக்கடம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மண்டலம் 69வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பார்க் 1வது வீதியில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட கழிவு நீர் தொட்டி உள்ளது. இதில் 60 எச்.பி. திறன்கொண்ட மோட்டார் மூலம் கழிவுநீர் பாதாள சாக்கடைக்குள் உந்தப்படுகிறது.

இதனிடையே அங்கு பொறுத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதானதை அடுத்து, நேற்று மாலை அதனை சரிசெய்து கிரேன் மூலம் மீண்டும் தொட்டிக்குள் இறக்கும் பணியில் மாநகராட்சி தற்காலிக ஒப்பந்த ஊழியர்களான ரத்தினபுரியைச் சேர்ந்த அர்ஜுன்குமார் (38), மற்றும் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மோட்டாரை கீழே இறக்கி பொருத்திவிட்டு, இருவரும் ஏணிப்படிகள் மூலம் மேலே ஏறிக்கொண்டிருந்த போது, அர்ஜுன்குமாரின் தலை உள்ளேயிருந்த பைப்பில் இடித்ததில், நிலைதடுமாறி தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

உடன்சென்ற சுரேஷ் அவரை காப்பாற்றுவதற்காக கீழே இறங்கிய போது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்து, அவரும் தொட்டிக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், தொட்டியில் இருந்த கழிவுநீரை, கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து சுமார் 6 மணி நேர போராட்டத்திர்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.

ஊழியர்கள் இருவரது உடலகளையும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய சாய்பாபா காலனி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

  1. தனியார் இடத்தில் உரிமையாளர் கைது செய்யப்படுவார்கள். இங்கு யாரை கைது செய்யபோகிறீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்த வானதி சீனிவாசன்- உடன் வந்த ராஜஸ்தான் முதல்வர்…

கோவை: கோவையில் வடக்கு தொகுதி தே.ஜ கூட்டணி வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை வடக்கு தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூட்டணி கட்சியினருடன்...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...