வீட்டுக்குள் புகுந்த 5 அடி நாகப் பாம்பு – தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பு- வீடியோ

கோவை:கோவை அவிநாசி சாலை அருகே வீட்டுக்குள் புகுந்த 5 அடி நாகப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவையில் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால், பாம்புகள் சூடு தாங்காமல் வெளியில் வருகின்றன. நேற்று தான் கோவைப்புதூரில் நாகப்பாம்பு பைக்கில் ஏறி படமெடுத்து ஆடிய நிலையில் இன்றும்
அவிநாசி சாலை அருகே உள்ள குடியிருப்பு வீட்டுக்குள் 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பை பாதுகாப்பாக மீட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Read news:டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்த சீரியல்.. கெத்து காட்டிய விஜய் டிவி!

கோவை அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு, ஆர்.ஜி. புதூர், அருளானந்தம் நகர் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கயிறு தொங்குவது போன்ற தோற்றத்தில் ஏதோ ஒன்று இருந்ததை வீட்டினர் கவனித்தனர்.

அதை அருகில் சென்று பார்த்தபோது, அது நாகப் பாம்பு என்பது தெரியவந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோவை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Read news:ரூ.10 கோடி பங்களா… மீனாவுக்கு அடிச்ச ஜாக்பாட்!

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர், பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பாம்பை அருகிலிருந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கோடை வெயில் அதிகரித்து வருவதால், பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வாக்குச்சாவடி முகவர்களுக்கு தங்க நாணயம்- செந்தில்பாலாஜி வைத்த கண்டிசன்…

கோவை: அதிக வாக்குகள் வாங்கிக் கொடுக்கும் வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார். கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில்...

Video