கோவை: ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
Read news:ரூ.10 கோடி பங்களா… மீனாவுக்கு அடிச்ச ஜாக்பாட்!
காந்திபுரம் அருகே உள்ள வி கே கே மேனன் சாலையில் வேட்பாளரோடு மத்திய அமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசியவர், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது எனவும், தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் மீது உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை இல்லை எனவும், உதயநிதி மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என குறிப்பிட்டார்.
Read news:திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்- மத்திய அமைச்சர் கோவையில் பேட்டி…
மேலும், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், இந்த தொகுதியில் போட்டியிடும் திமுகவின் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழல், மின்சாரத் துறையில் ஊழல் என பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அவரை இந்த தொகுதி மக்கள் வெற்றி பெற வைக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
ஊழலற்ற, மக்கள் வளர்ச்சிக்கான ஆட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

