கோவை- எஸ்.பி.வேலுமணி சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்பி வேல்மணி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு. பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர் அந்த பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.


