கோவை: கோவை சவுரிபாளையத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சவுரிபாளையம் மெயின் ரோடு, உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்மூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாந்த் (30). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி காலை வழக்கம் போல் இவரது தாயார் உமாபரமேஸ்வரி வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு 7.30 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, கோகுல்பிரசாந்த் அறையில் தூக்கில் தங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் கோகுல்பிரசாந்த்தை பரிசோதனை செய்து பார்த்த போது அவர இறந்து இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


