கோவையில் டெல்லி முதல்வர்… பாஜக தொண்டர்கள் ஏமாற்றம்!

கோவை: பிரச்சார வாகனத்தில் ஏறியதும், பொசுக்குன்னு பேச்சை முடித்த டெல்லி முதல்வரால் கோவை பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று கோவை வந்தார்.

தொடர்ந்து அவர், வெங்கிடாபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருக்கு முன்பாக 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் பேரணியாகச் சென்றனர்.

Advertisement

டெல்லி முதல்வர் பிரச்சாரத்தின் போது உரையாற்றுவார் என்றும், அவரை உரையைக் கேட்கலாம் என்றும் பாஜக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், பிரச்சார வாகனத்தில் ஏறிய ரேகா குப்தா, “அனைவரும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று மட்டும் பேசிவிட்டு தனது உரையை முடித்தார்.

Advertisement

அதன் பிறகு வாகனத்தின் மீது நின்று கை அசைத்தவாறே அவர் பேரணியாகச் சென்றார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியில் பேசிய ரேகா குப்தா,

“​தற்போது தமிழகம் வளர்ச்சியில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் இந்த வளர்ச்சியை விரும்புகிறார்கள். மாநிலம் முழுவதும் ஒரு பெரிய மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி உறுதி. வானதி நலமுடன் உள்ளார். விரைவில் அவர் உங்களுடன் பணியாற்றுவார். வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் ஆதரவை வழங்குவார்கள். வானதி சீனிவாசன் ஒரு சிறந்த வேட்பாளர். அவர் மீது மக்கள் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். அவர் நிச்சயமாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடிப்பெருக்கு- பேரூர் படித்துறையை சுத்தம் செய்ய களம் இறங்கிய மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள்…

கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறையை சுத்தம் செய்வதற்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கினர். ஆடிப்பெருக்கு நன்னாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நீர் நிலைகளில் பொதுமக்கள் திரண்டு கனிகள் பலகாரங்கள் உணவுகள்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...