கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அறநிலையத் துறை ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள பழமையான தேரில் இருந்த வெள்ளிப் பொருட்கள் மற்றும் தங்க குண்டுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத் துறை ஊழியரான ஆனந்தன் என்பவருக்கு கோவை நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
Read news வண்டி ஓட்டிப் பார்க்கட்டுமா? கோவையில் உதவியரிடம் கைவரிசை; வீடியோ
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியரை பணியில் இருந்து நீக்கியது.
மேலும், திருட்டு சம்பவம் நடைபெற்ற காலத்தில் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்ததாகவும், சிசிடிவி கண்காணிப்பு போதுமானதாக இல்லாததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமர்சையாக நடைபெற்ற கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் திருத்தேரோட்டம்
அதன்படி, கோவில் வளாகத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், பாதுகாப்பு பணியாளர்களின் கண்காணிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், கோவில் சொத்துகள் மற்றும் மதிப்புள்ள பொருட்களை பராமரிக்கும் முறைகள் குறித்து மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவில் ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதுடன், அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






Comments are closed.