தடையை மீறி மது விற்ற 8 பேர் கைது; 268 பாட்டில்கள் பறிமுதல்

கோவை : வாக்கு எண்ணிக்கை நாளில் கோவையில் சட்டவிரோதமாக மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து 268 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையடுத்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், சிலர் மதுபாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலையில் விற்பனை செய்தனர். ரூ.150 மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் ரூ.300 வரை விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். கடைவீதி, வெரைட்டிஹால் ரோடு, சாயிபாபா காலனி, போத்தனூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மது விற்பனை நடைபெற்றது கண்டறியப்பட்டது.

Advertisement

இதையடுத்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபுதேவா (26), பொன்னையராஜபுரத்தை சேர்ந்த ஜிபான் (23), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (35), ஜெய்சங்கர் (43), ராஜ்குமார் (45), ராமநாதபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (42), நவநீதகிருஷ்ணன் (30), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் (41) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 268 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் மண்ணெண்ணய் குண்டு வீசிய கும்பலில் ஒருவர் கைது…

கோவை: கோவையில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.