ஈஷா கிராமோத்சவ வீரருக்கு தேசிய அணியில் வாய்ப்பு

கோவை:ஈஷா கிராமோத்சவம் 2025-இல் சிறந்த வீரராக தேர்வான மணிகண்டனுக்கு சென்னை பிளிட்ஸ் அணியின் பயிற்சி முகாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

Isha Foundation சார்பில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் 2025 விளையாட்டுத் திருவிழாவில் சிறந்த வீரராக தேர்வான மணிகண்டனுக்கு, நாட்டின் முன்னணி வாலிபால் தொடரான Prime Volleyball League தொடரில் பங்கேற்கும் Chennai Blitz அணியின் முதன்மை பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பிளிட்ஸ் அணி வெளியிட்டுள்ள கடிதத்தில், “இந்தியா முழுவதும் விளையாட்டு கலாசாரத்தை வளர்ப்பதற்காக ஈஷா கிராமோத்சவம் மேற்கொண்டு வரும் குறிப்பிடத்தக்க பணியை நாங்கள் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

கடந்த ஓராண்டாக ஈஷா கிராமோத்சவத்துடன் எங்களுக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு, கிராமங்களில் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் பொதுவான நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

மணிகண்டனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பு, அவரது தனிப்பட்ட திறமைக்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல், ஈஷா கிராமோத்சவம் மூலம் உருவாகி வரும் ஆயிரக்கணக்கான கிராமப்புற வீரர்களின் திறனுக்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் (Salem) மாவட்டம் உத்தமசோழபுரம் (Uthamacholapuram) ஊராட்சியை சேர்ந்த மணிகண்டன், கடந்தாண்டு நடைபெற்ற கிராமோத்சவம் வாலிபால் போட்டிகளில் தனது துடிப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இறுதிப்போட்டியில் அவரது அணி வெற்றி பெற்ற நிலையில், சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

கிராமப்புற விளையாட்டுப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய மணிகண்டன், தற்போது சென்னை பிளிட்ஸ் அணியின் பயிற்சி முகாமில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்தத் தேர்வு குறித்து Sadhguru வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மணிகண்டனுக்கும், கிராமப்புற திறமைகளை அங்கீகரித்து அவர்களை முதன்மை விளையாட்டு அரங்கிற்கு கொண்டு வரும் சென்னை பிளிட்ஸ் அணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த அங்கீகாரம், பாரதத்தின் கிராமப்புறங்கள் முழுவதும் ஈஷா கிராமோத்சவத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான உத்வேகத்தையும் வேகத்தையும் வழங்கும்” எனக் கூறியுள்ளார்.

சத்குருவின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் நடைபெறும் ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா, கிராமப்புற மக்களிடையே விளையாட்டை ஊக்குவிப்பதுடன், இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தை ஒழித்தல், கிராமப்புற பெண்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி அவர்களின் சுயமுன்னேற்றத்திற்கு வழிவகை செய்தல் மற்றும் சாதிய வேறுபாடுகளை கடந்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் நடத்தப்பட்டு வருகிறது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் கோர விபத்து; கல்லூரி மாணவி பரிதாப பலி!

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி செவிலியர் கல்லூரி அருகே இன்று பிற்பகல் ஏற்பட்ட சாலை விபத்தில், இரண்டாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்தார். மேலும், இரண்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...