சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்… பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸ்..!

கோவை:கோவை சரவணம்பட்டியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்தனர்.

கோவை மாநகரில் விபத்துகள் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சரவணம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 இளைஞர்கள் சாலையில் ஆபத்தான முறையில் ஆட்டம் போட்டபடி அதிவேகமாக சென்றனர்.

இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனை கண்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து, வீடியோவில் பதிவான மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை வைத்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதும், அவர்களில் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம் மற்றும் ஆபத்தான முறையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

பின்னர், 4 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.