கோவை: கோயமுத்தூர் வ உ சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி 11ஆம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி வஉசி மைதானத்தில் தமிழ்நாடு மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு திட்டங்கள் தொடர்பான பல்வேறு அரங்குகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. மேலும் பல்வேறு உணவகங்களும் இதில் இடம்பெறவுள்ளது.

வருகின்ற 11ஆம் தேதி இந்த பொருட்காட்சியை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொருட்காட்சியில் உள்ள அரங்குகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது பொது மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


