கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி விட்டு திருட்டு- கோவையில் அரங்கேறிய சம்பவம்…

கோவை: சூலூரில் கண்காணிப்பு கேமரா அமைத்த பின்பும் பேக்கரியில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

கோவை அருகே சூலூர் அருகே வெங்கடாபுரம் பிரிவு பகுதியில் பேக்கரியின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

சூலூர் அருகே வெங்கடாபுரம் பகுதியில் சிங்கம்புணரியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கடந்த 20 வருடங்களாக செல்வாபேக்கரி எனும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் வியாழக்கிழமை இவரது பேக்கரியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கு இருந்த 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இது பற்றி போலீசாருக்கு தமிழரசன் தெரிவிக்கவில்லை.
வீண் அலைச்சல் ஏற்படும் என கூறி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டுவிட்டார்.

நண்பர்களின் அறிவுரையை அடுத்து திங்கட்கிழமை கண்காணிப்பு கேமராக்களை பேக்கரி முழுவதும் பொருத்தியுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை (25 ஆம் தேதி) அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேக்கரியை நின்று நோட்டமிட்டு விட்டு பேக்கரி பூட்டை இரும்பு ராடால் உடைத்துள்ளனர். ஆனால் பேக்கரியின் சென்டர் லாக்கை உடைக்க முடியவில்லை. அங்கு கண்காணிப்பு கேமராக்களை அங்கு இருந்த துணிகளை கொண்டு மூடி மறைத்தும் கேமராக்களின திசையை மாற்றியும் வைத்துள்ளனர்.

Advertisement

பின்பு திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளனர் இது குறித்து நீலாம்பூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் திருட்டு பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் பகுதியில் 7 கடைகளை உடைத்து திருடிய சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே நீலாம்பூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.