கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி விட்டு திருட்டு- கோவையில் அரங்கேறிய சம்பவம்…

கோவை: சூலூரில் கண்காணிப்பு கேமரா அமைத்த பின்பும் பேக்கரியில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை அருகே சூலூர் அருகே வெங்கடாபுரம் பிரிவு பகுதியில் பேக்கரியின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

சூலூர் அருகே வெங்கடாபுரம் பகுதியில் சிங்கம்புணரியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கடந்த 20 வருடங்களாக செல்வாபேக்கரி எனும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் வியாழக்கிழமை இவரது பேக்கரியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கு இருந்த 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இது பற்றி போலீசாருக்கு தமிழரசன் தெரிவிக்கவில்லை.
வீண் அலைச்சல் ஏற்படும் என கூறி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டுவிட்டார்.

நண்பர்களின் அறிவுரையை அடுத்து திங்கட்கிழமை கண்காணிப்பு கேமராக்களை பேக்கரி முழுவதும் பொருத்தியுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை (25 ஆம் தேதி) அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேக்கரியை நின்று நோட்டமிட்டு விட்டு பேக்கரி பூட்டை இரும்பு ராடால் உடைத்துள்ளனர். ஆனால் பேக்கரியின் சென்டர் லாக்கை உடைக்க முடியவில்லை. அங்கு கண்காணிப்பு கேமராக்களை அங்கு இருந்த துணிகளை கொண்டு மூடி மறைத்தும் கேமராக்களின திசையை மாற்றியும் வைத்துள்ளனர்.

பின்பு திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளனர் இது குறித்து நீலாம்பூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் திருட்டு பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் பகுதியில் 7 கடைகளை உடைத்து திருடிய சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே நீலாம்பூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தனியாக தங்கும் கல்லூரி மாணவர்கள் உஷார் ! கோவை போலீஸ் முக்கிய எச்சரிக்கை

கோவையில் தனியாக தங்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கொள்ளை மிரட்டலில் ஈடுபடும் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Video

கோவையில் பள்ளி சீருடையில் விதிகளை மீறிய மாணவர்கள்- வீடியோ காட்சிகள்…

ஆர்.எஸ்.புரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் ஆபத்தாக பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது