அமைச்சர் சரத்குமாருக்கு கண்டனம்- கோவை எம்பி, மாநகராட்சி மேயர் கைது…

கோவை: அமைச்சர் சரத்குமாரை பதிவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

உடனடியாக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சமயம் அனுமதியின்றி திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனப் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி மேயர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் கோமாரி தடுப்பூசி முகாம்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை…

கோவை: கோவையில் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் 'தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின்" NADCP. National Animal Disease Control...

Latest News Coimbatore

Video

கோவையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்ட திருநங்கை- வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…

கோவை அன்னூரில் முதியவரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி, போலீஸ் விசாரணை கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.