மூத்த கவிஞர் புவியரசு அவர்களுக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் அஞ்சலி

கோவை : சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் குறிப்பிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் புவியரசு அவர்கள் ஆற்றிய அரிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது படைப்புகள் வருங்கால தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Kanimozhi Santhosh pays tribute

மேலும், புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இறுதியாக, புவியரசு அவர்களின் புகழும், இலக்கியப் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்று கனிமொழி சந்தோஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...