கோவை: சமூக நீதி விடுதிகளில் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளைப் பெற்றிடவும் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை போக்கிக் கொள்ளவும்
ஏதேனும் விடுதிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படின் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், விடுதி நிர்வாகம் மற்றும் அசாதாரண சூழல் உள்ளிட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் தைரியமுடன் எதிர்கொள்வதற்கு புகார் தெரிவிப்பதற்கென்று 9445477016 என்ற வாட்ஸ்அப் எண் புதியதாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
9445477016 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு விடுதியில் வழங்கப்படும் வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் தவறுகள்விடுதி நிர்வாகம் சரிவர இயங்கவில்லை எனில் அதன் விவரம், மாணவ மாணவியரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பின் அதன் விவரம் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
மேலும், புகார் அளிக்கும் மாணவ, மாணவியர் விவரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது. ரகசியம் காக்கப்படும். மாறாக புகார் குறித்து மட்டுமே விசாரணை செய்யப்படும். இந்த வாய்ப்பினை நன்முறையில் பயன்படுத்தி தமிழக அரசால் வழங்கப்படும் விடுதி வசதி முழுமையும்விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களும் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


