‘பாகுபலியும் குடும்பத்தினரும்! பழங்குடியின கிராமதிற்கு படையெடுப்பு- பீதியில் மக்கள்…!

கோவை : கோவை மாவட்டம் மூலக்காடு பழங்குடியினர் கிராமத்தில், 3 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட 24 வீரபாண்டி ஊராட்சியில் உள்ள மூலக்காடு கிராமம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் குடியிருப்பாகும். வறட்சி மற்றும் உணவு, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காட்டு யானைகள் அடிக்கடி இந்தப் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன.

Advertisement

Also Read:ஆட்டோவை முந்த முயற்சி விபரீதம்… தலைக்குப்புறக் கவிழ்ந்த கல்லூரி மாணவர்களின் கார்- video

நேற்று இதே பகுதியில் உள்ள பொதுத் தண்ணீர் தொட்டியில் ஒற்றை காட்டு யானை ஒன்று தண்ணீர் குடித்த காட்சி வைரலான நிலையில், இன்று அதே இடத்திற்கு 3 குட்டிகளுடன் மொத்தம் 7 யானைகள் கொண்ட கூட்டம் வந்துள்ளது.

குட்டி யானைகளை நடுவில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைக் கூட்டம் கிராம எல்லைப் பகுதியில் உலா வந்தது. இந்த காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

Wild Elephant Family in Coimbatore

குட்டிகளுடன் இருக்கும் யானைகள் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் ஆக்ரோஷமாக மாறும் வாய்ப்பு இருப்பதால், பழங்குடியினர் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

Also Read: கோவையில் ஆபத்தான நிலை… இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை திடீர் உயர்வு

தற்போது யானைக் கூட்டம் கிராம எல்லைப் பகுதியில் முகாமிட்டிருப்பதால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், கிராம மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...