விபத்தில் மூளைச்சாவு… உறுப்பு தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த கோவை குடும்பம்

கோவை: கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாலகிருஷ்ணனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் கூட்டுறவு காலனி (Co-operative Colony) பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த ஜூலை 1-ஆம் தேதி கவுண்டம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அரசு மருத்துவக் குழுவினர் அவரது குடும்பத்தினரிடம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், “அவரது உறுப்புகள் பிறரின் உயிரைக் காப்பாற்றட்டும்” என்ற உயர்ந்த எண்ணத்துடன் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு தான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி மேற்பார்வையில் மாற்று உறுப்பு அறுவைச் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவ நிபுணர்கள் பாலகிருஷ்ணனின் உடலில் இருந்து ஒரு சிறுநீரகத்தையும், இரு கண்களின் கருவிழிகளையும் வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து தானமாகப் பெற்றனர். இந்த உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாற்று உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

உறுப்பு தான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பாலகிருஷ்ணனின் உடலுக்கு மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல், இறுதிச் சடங்குகளுக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் எடுத்த இந்த மனிதநேய முடிவு, மூன்று பேரின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மறுவாழ்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் HIV குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்…

கோவை: கோவையில் HIV குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் சார்பில், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...