கோவையில் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் தையல் செய்து உலக சாதனை!

கோவை: கோவையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் துணிப்பைகள் தைத்து உலக சாதனை படைத்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றங்களின் தாக்கத்தை குறைத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் நெகிழி பயன்பாட்டுக்கு மாற்றாக துணிப்பைகளை அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்பட்டது.

Advertisement

அதேபோல், பெண்களின் சுயதொழில் மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்த உலக சாதனை முயற்சியில் சமூகத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே அரங்கில், ஒரே நேரத்தில் ஊசி மற்றும் நூலை பயன்படுத்தி துணிப்பைகளை தைத்தனர்.

இந்த சாதனை, “World Wonders Book of Records” அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆர்டர் வந்த போட்டோ ஷூட்- நம்பி என்ற போட்டோகிராபருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: போட்டோ ஷூட் என ஏமாற்றி இளைஞர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயில் மோதி உயிரிழந்ததாகக்...

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.