கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரே நாளில் 8 வழக்குகளில் அபராதம்- நீதிமன்றம் உத்தரவு…

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தொடர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்
அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில் , 8 வழக்குகளில் அரசு வழகறிஞர் ஆஜராகாததால் கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரே நாளில் 62,000 ரூபாய் அபராதம் விதித்து 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றிய வந்த அரசு வழகறிஞர்களின் பணிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் நிறைவடைந்தது. கோவையிலும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் பணிக்காலம் முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய அரசு வழக்கறிஞர்களுக்கான உத்தரவுகள் இன்னும் வழங்கப்படாததால் நீதிமன்றத்தில் பொறுப்பு ஏற்க முடியவில்லை.

இதன் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 8 வழக்குகளில் கூடுதல் அரசு வழகறிஞர்கள் ஆஜராகாததால் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமாருக்கு 62,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கருமத்தம்பட்டி கொலை வழக்கு, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என விசாரணைக்கு வந்த மொத்தம் எட்டு வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் 62 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைதீர் முகாம்…

கோவை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் வருகின்ற 10.07.2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில்...

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...