சமூக நல்லிணக்க ஊராட்சி விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை ஆட்சியர் அறிக்கை…

கோவை: தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-2027 விண்ணபிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதிபடைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும்.அதனுடன் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

Advertisement

இதனடிப்படையில் 2026-27.ஆம் ஆண்டிற்கான “சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து 15.07.2026 0 5.00 விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Power Cut In Coimbatore: கோவை நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் ஜூலை 8 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...