சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகள் தற்போதைய தேவை- சுரேஷ்கோபி கோவையில் பேச்சு…

கோவை: தற்போதைய சூழலில் சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி(தனியார்) அரங்கில், Swachhata Pakhwada நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இதில் சிறப்பு விருந்தினராக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், தூய்மை பாரதம் உறுதிமொழி மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கல்லூரி மைதானத்தில் தாயின் பெயரில் ஒரு மரம் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தனது தாயின் பெயரில் மரக்கன்றை மத்திய இணை அமைச்சர் நட்டு வைத்தார். மேலும், கல்லூரி பணியாளர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தற்போதைய சூழலில் பல்வேறு மாசுபாடுகள் காரணமாக, அதிகளவு கார்பன் எரிவாயு வெளியேற்றப்படுவதாகவும் சுற்றுச்சூழல் வேகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். சுற்றுச்சூழலை பாதுகாத்திட மரக்கன்றுகளை அதிகம் நட வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகள் தற்பொழுது தேவை என்றும் தெரிவித்தார்.

இந்த swachhata pakhwada எனும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்பாடுகள் என்பது என்பது நம்முடைய வருங்கால தலைமுறையிருக்கானது. மாணவர்கள் தூய்மை நடவடிக்கைகளை இன்று ஒரு நாள் மட்டும் மேற்கொள்ளாமல், ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

போஸ்டர்களை அகற்றிய மாநகராட்சி… ஆனால் சாலையிலேயே குப்பையாக வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவையில் அகற்றப்பட்ட விளம்பர போஸ்டர்கள் சாலையிலேயே குவிந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்ததுடன் விபத்து அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...