சுதந்திர தினத்தை பறைசாற்றிய கோவை மாகாளியம்மன் கோவில்

கோவை: காய்கறிகளை கொண்டே சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக அம்மன் கோவில் அலங்கரிக்கப்பட்டு ஆடி வெள்ளி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

நாளைய தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டும் ஆடி வெள்ளியை முன்னிட்டும் கோவை பெரிய கடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் காய்கறிகளைக் கொண்டே இந்திய நாட்டை பறைச்சாற்றும் வகையில் தேசியக்கொடி, நாட்டின் வரைபடம், தேசிய பறவை, தேசிய விலங்கு ஆகியவை வடிவமைக்கப்பட்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் துவங்கியது முதல் கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கோவில் முழுவதும் ஒவ்வொரு வகையாக அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமையானஇன்று மாகாளி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளதால் காய்கறிகளை கொண்டே இந்திய நாட்டின் தேசியக்கொடி, இந்திய நாட்டின் வரைபடம், தேசிய பறவை மயில், தேசிய விலங்கு புலி, அன்னப்பறவை ஆகியவை வடிவமைக்கப்பட்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கேரட், பீட்ரூட், கத்தரி, முட்டைகோஸ், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட பல வகை காய்கறி கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கண்டெடுக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தை; உரிமை கோருவது யார்? கோவை மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

கோவை: கோவையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை உரிமை கோருவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டம் அரிசிபாளையத்தில் இருந்து 13.07.2026 அன்று மீட்கப்பட்ட ஆண் குழந்தை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...