கோவை :ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.1-க்கு சிம் கார்டு வழங்கும் சிறப்பு முகாமை பிஎஸ்என்எல் நிறுவனம் கோவையில் நடத்தியது.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த சிறப்பு சிம் கார்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மகாபலி அரசன் வேடம் அணிந்தபடி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில், வெறும் ரூ.1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம் கார்டை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டது.
Also Read: உள்ளாடையில் 2,100 போதை மாத்திரைகள் ; கோவை முழுவதும் சப்ளை? இன்ஸ்டாவில் தகவல் பரிமாற்றம்!
இந்த சிம் கார்டில் 24 நாட்களுக்கு Unlimited Calls, தினசரி 1GB Data மற்றும் 100 SMS உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், பிஎஸ்என்எல் FTTH வாடிக்கையாளர்களுக்காக மாதம் ரூ.1,199 மதிப்புள்ள திட்டம் சிறப்பு சலுகையாக ரூ.1,111-க்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 200 Mbps வேகம், Unlimited Calls மற்றும் 12 OTT தளங்களுக்கான சந்தா உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
கோவை மாவட்டத்தில் சுதந்திர தினம் முதல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த சிறப்பு சிம் கார்டு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
Also Read: நீதிபதி உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் குளக்கரையை வக்கீல் குழுவினர் ஆய்வு; எதற்காக?
இதன் தொடர்ச்சியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை பிஎஸ்என்எல் கோவை மாவட்ட பொதுமேலாளர் சுப்ரமண்யம் தொடங்கி வைத்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சிறப்பு சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, ரூ.1-க்கு சிம் கார்டைப் பெற்று பிஎஸ்என்எல் வழங்கும் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.





