கோவை: சிங்காநல்லூர் குளத்தின் நிலை, சாலை பணிகள் மற்றும் கழிவுநீர் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் வக்கீல் குழுவினர் அக்குளக்கரையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கோவை சிங்காநல்லூரில் உள்ள குளக்கரையில் சாலை மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், அந்த நிலம் வருவாய்த்துறை ஆவணங்களில் கால்வாய் என்று உள்ளதாகவும், எனவே இங்கு எந்த விதமான மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிங்காநல்லூர் குளக்கரையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
Also Read: Coimbatore power cut: கோவையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள்?
மேலும், சிங்காநல்லூர் குளத்தின் நிலை, சாலை பணிகள் மற்றும் கழிவுநீர் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இக்குழுவுக்கு வக்கீல் முகமது சாதிக் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று முகமது சாதிக் தலைமையிலான வக்கீல் குழுவினர் சிங்காநல்லூர் குளக்கரைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது குளக்கரையில் கால்வாய் என்று உள்ள சர்வே எண்களையும், அங்கு நடைபெற்ற சாலை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள், மீன்பிடித்தல், தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
Also Read:ஒரு செங்கலைக் கூட வைக்க முடியாது- மேகதாது விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…
விரைவில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என வக்கீல் குழுவினர் தெரிவித்தனர்.





