கோவையில் ஐ.டி., நிறுவனத்தில் புகுந்து திருடிய டிப்-டாப் ஆசாமி!

கோவை: கோவையில் ஐ.டி நிறுவன உரிமையாளரைப் பார்க்க வருவது போல் நடித்து, லேப்டாப்களைத் திருடிச் சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(34). இவர் அதே பகுதியில் ஐ.டி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று அந்த நிறுவனத்திற்கு டிப்-டாப்பாக வந்த ஆசாமி, அங்கு பணியில் இருந்த பெண்ணிடம் உங்கள் உரிமையாளரைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார். விவரங்களைக் கேட்ட்ட அந்த பெண் ஊழியர் சிறிது நேரம் காத்திருங்கள், வந்து விடுவார் என்று கூறிவிட்டு அலுவலக பணியை கவனித்துள்ளார்.

அந்நேரத்தில் டிப்-டாப் ஆசாமி தனது பேக்கை எடுத்து கொண்டு அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார். ஒவ்வொரு முறை செல்லும்போது, நிறுவனத்தில் இருந்த லேப்டாப்பை தனது பேக்கிற்குள் மறைத்து எடுத்து சென்று வெளியே பைக்கில் காத்திருந்த தனது கூட்டாளியிடம் கொடுத்து விட்டு வந்துள்ளார்.

Advertisement

இதேபோல், அவர் 8 லேப்டாப்பை திருடியுள்ளார். பின்னர் அந்த ஆசாமி பிறகு வருவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்துதான் நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு டிப்-டாப் ஆசாமி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது.

உடனே இது குறித்து உரிமையாளர் ராஜேஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து லேப்டாப் திருடிய டிப்-டாப் ஆசாமியைத் தேடி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பு தூய்மை…

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் சிறப்பு தூய்மை செய்யப்பட்டன. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய...

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.