பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கோவைக்கு எந்த இடம்? எவ்வளவு தேர்ச்சி? – முழு விவரம்!

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் கோவையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 97.48% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை 7,92,494 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில், மாணவிகள் 4,19,316, மாணவர்கள் 3,83,128 பேர்.

தேர்வு எழுதியவர்களில் 7,53,142 பேர், அதாவது 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,05,472 (96.7%), மாணவர்கள் 3,47,670 (93.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டை விட இந்தாண்டு தமிழகத்தில் 0.47% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அரியலூர் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 97.98% இரண்டாமிடமும், திருப்பூர் 97.53% மூன்றாமிடமும், கோவை 97.48% தேர்ச்சியுடன் 4ம் இடமும் பிடித்துள்ளது. அடுத்ததாக குமரி 97.01% தேர்ச்சியுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 180 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

கோவையில் மாணவர்கள் 16,135 பேர், மாணவிகள் 18,902 பேர் என மொத்தம் 35,037 பேர் தேர்வு எழுதினர். இதில், 15,579 மாணவர்களும். 18,576 மாணவிகளும் என மொத்தம் 34,155 பேர் தேர்ச்சியடைந்துள்ளன்ர. மாணவர்களில் 96.55% பேரும், மாணவிகளில் 98.28% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 1.73 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையில் தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 97.48% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.