கோவை: கோவையில் நடைபெற இருந்த இளையராஜா இசைக்கச்சேரி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கச்சேரி நடைபெற்றுள்ள நிலையில், வரும் மே 17ம் தேதி மீண்டும் இளையராஜாவின் கச்சேரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் மற்றும் வேறு சில காரணங்களுக்காக இசைக்கச்சேரி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கச்சேரி நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.