மோகன் பகவத்திற்கு முருகன் சிலை வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

கோவை: கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., விழாவில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24 வது பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா பேரூர் ஆதீன மடத்தில் நடைபெற்றது.

இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் மந்திரங்கள் ஓத, மோகன் பகவத் சிவலிங்க அபிஷேக வழிபாட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முருகன் சிலையை பரிசாக வழங்கினார். நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் வேல் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்வில், மோகன்பகவத் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...