கோவை: கோவை ஒண்டிப்புதூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை ஒண்டிப்புதூர் கம்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். வழக்கம் போல நேற்று இரவு வீட்டின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்துள்ளார்.
அந்நிலையில் இரவு சுமார் 12:30 மணியளவில் அவரது வீதி வழியே வந்து நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தின் லாக்கை உடைத்து வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆகாஷ் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சிசிடிசி காட்சிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.