கோவை மாநகராட்சி பணிக்குச் சென்ற ஜேசிபி முதியவர் மீது மோதியது

கோவை: கோவையில் மாநகராட்சி பணிக்கு வேகமாக சென்ற ஜே.சி.பி வாகனம் முதியோர் மீது மோதியது.

கோவையில் மாநகராட்சி பணிகளுக்காக வேகமாகச் சென்ற ஜேசிபி வாகனம் முதியோர் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

Advertisement

கோவை மாவட்டம் உக்கடம், 86 வது வார்டு, புல்லுக்காடு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்து உள்ளார்.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், இன்று காலை புல்லுக்காடு பகுதியில் ஜே.சி.பி வாகனத்தின் மூலம் காலையில் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

அப்போது சாலையில் நடந்து சென்ற முதியவரை ஜே.சி.பி மோதியதில் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினார். உடல் நசுங்கிய நிலையில் காயம் அடைந்த அந்த முதியவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காலை வேளையில் மக்கள் அதிகம் நடமாடும் நேரங்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது எனவும், இத்தகைய பணிகளை இரவு நேரங்களில் மட்டும் மேற்கொண்டு விரைவில் முடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Recent News

துணை ஜனாதிபதி பாதுகாப்பு விஷயத்தில் போலீசார் கூறுவது ஏற்க தக்கது அல்ல- வானதி சீனிவாசன்…

கோவை: துணை ஜனாதிபதி பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் விஷயத்தில் போலீஸ் கூறுவது ஏற்கக் கூடியது அல்ல என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group