Power Shutdown Chennai: மின் வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சில பகுதிகளில் ஆகஸ்ட் 25, திங்கட்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.
முடிச்சூர் 33 கேவி சப்ஸ்டேஷன் மூலம் விநியோகம் பெறும் பகுதிகள்:
ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சரங்கா அவன்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர்,
காமராஜர் நெடுஞ்சாலை, பெட்டை ஸ்ட்ரீட், கண்ணகி ஸ்ட்ரீட், மேட்டு ஸ்ட்ரீட், பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்கரா அவன்யூ,
பாரதி அவன்யூ, சிற்றா அவன்யூ, பாலாஜி நகர், குரிஞ்சி நகர், காகபுஜந்தர் நகர், காமராஜர் ஹைரோடு மற்றும் சதகோபன் நகர்.
மேற்கு தாம்பரம் 110 கேவி சப்ஸ்டேஷன் மூலம் விநியோகம் பெறும் பகுதிகள்:
திருவேங்கடம் நகர், மேலந்தை ஸ்ட்ரீட், சவுத் ஸ்ட்ரீட், பூர்ணத்திலகம் ஸ்ட்ரீட், கல்யாண நகர் மற்றும் வைகை நகர்.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.